Tuesday 30 May 2017



நான்கு வர்ண பிரிவு நாத்தீகம், கம்யூனிஸ்டிலும் கூட உள்ளதா.?

தற்போதைய உலகில் வர்ணாஷ்ரம தர்மம் பின்பற்றப்படுகிறதா என்றால், ஆம் என்றும் இல்லை என்றும் பதில் கூறலாம். வர்ணாஷ்ரம தர்மத்தின் பல்வேறு நெறிகளும் அதன் அமைப்பும் இன்றைய சமுதாயத்தில் இல்லை. ஆனால் அதே நேரத்தில், வர்ணாஷ்ரம தர்மம் எவ்வாறு மனிதர்களை பாகுபடுத்துகின்றதோ, அதே போன்ற பாகுபாடு இன்றும் மனித சமுதாயத்தில் (நாத்திகர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள் மத்தியிலும்கூட) இருக்கத்தான் செய்கிறது. பிரிவுகள் இல்லையெனில் உலகம் சீராக இயங்க இயலாது.

உதாரணமாக, ஒரு பெரிய நிறுவனம் ஒன்றில் இந்த நால்வகை பிரிவினர்களும் உள்ளனர் என்பதை ஆராய்வோம். நிறுவனத்தின் கொள்கைகளையும் படைப்புகளையும் வடிவமைக்கக்கூடிய புத்திசாலிகள் ஒரு பிரிவினர், இவர்கள் பொதுவாக குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பர், இவர்களை பிராமணர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தினை நிர்வகிப்பவர்கள் இரண்டாம் பிரிவினர், இவர்களை சத்திரியர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தின் படைப்புகளை வெளியில் சென்று விளம்பரம் செய்து வியாபாரம் செய்பவர்கள் மூன்றாம் வகையினர், இவர்களை வைசியர்களுடன் ஒப்பிடலாம். நிறுவனத்தின் படைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் நான்காம் வகையினராகவும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களாகவும் உள்ளனர், இவர்களை சூத்திரர்களுடன் ஒப்பிடலாம்.

கடவுளை மறுக்கும் நாத்திகன், சமத்துவம் விரும்பும் கம்யூனிஸ்டுகள் போன்றவர்களுக்கும்கூட, கட்சி நடத்துகையில் இந்த நால்வகைப் பிரிவினர் கட்டாயம் தேவைப்படுகின்றனர். கட்சியின் கொள்கைகளை வகுப்பவர்கள் (அறிவாளி பிரிவினர்), எதிர்கட்சியினரிடம் போராடி கட்சியை நடத்துபவர்கள் (நிர்வாக பிரிவினர்), கட்சிக்கு தேவையான நிதியை திரட்டுபவர்கள் (வியாபார பிரிவினர்), ஆகியோர் மட்டுமின்றி அதிக எண்ணிக்கையில் தொண்டர்களும் (தொழிலாளர்கள்) தேவைப்படுகின்றனர். இந்த தொண்டர்கள் கூட்டம் நடத்த பந்தலிடுவது முதல், போஸ்டர், பேனர் ஒட்டுவது வரையுள்ள எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர்.

இப்போது சொல்லுங்கள் இந்த நால்வகை பிரிவினர்கள் இல்லாமல் உலகம் இயங்குதல் சாத்தியமா என்று.
பிறப்பின் அடிப்படையில் பிரிக்கவில்லையே

No comments:

Post a Comment