Monday 29 May 2017

ராமனுக்கு பல மனைவிகள் உண்டா ?


அம்பேத்கார் என்பவரும், பல பெரியார்வாதிகளும், நாத்திகவாதிகளும் கூறும் ராமாயண பொய்களில் இதும் ஒன்று.


 அதாவது, இராமாயணத்தில் 'ராமனின் மனைவிகள்' என்கிற வார்த்தை ராமாயணத்தில் சில இடங்களில் வருவதாக கூறுகிறார்கள். இதனால் ராமனுக்கு பல மனைவிகள் உண்டு என்று தங்களது கற்பனையை கூறுகிறார்கள்.

 "Rama's wives will get delighted. Your daughters-in-law will be unhappy because of Bharata's waning position."- ramayanam book II-8-12

  இராமாயணத்தில் ஒரு சமயம், பரதனின் தாய் கைகேயியின் தோழி மந்தரை என்பவள் ராமன் அரசராவது பிடிக்காமல்,அவரை பற்றி அவதூறுகளை பரதனின் தாய் கைகேயியிடம் கூறுகிறாள். ராமன் ஒரு வேளை மன்னன் ஆனால் அவர் பற்பல மனைவிகள் வைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறாள். இதனால் உன்னை அவர்கள் துரத்துவார்கள் என்கிறார். இப்படி ராமர் எதிர்காலத்தில் இப்படி இருக்க வாய்ப்புள்ளதாக கூறும் வசனம் எப்படி அவர் பல மனைவிகள் வைத்ததாக எடுத்துக்கொள்ளமுடியும் ?

 இதை தான் டாக்டர் அம்பேத்கார் தனது நூலில் இப்படி கூறுகிறார்.


 அதாவது, ஒரு ராஜா ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியை வைத்துக்கொள்வது என்கிற ஒரு விதிமுறை உள்ளதால்இவள் இப்படி கைகேகியிடம் கூறுகிறாள். இதில்் 'ராம மனைவிகள்' 'Rama's wives' என்கிற வார்த்தையேஇங்கே ராம பல மனைவிகள் இருந்தனர் என்று சுட்டிக் காட்டவில்லை. மந்தரை, ராமர் ஒரு அரசன் என்றும் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள  ஒரு சாத்தியமான எதிர்கால வாய்ப்புகளை கூறுகிறார்.


 இதன் உண்மையை கீழே கொடுத்துள்ளேன்..

  
அயோத்யா காண்டம், ஸர்கம்-8,வசனம்-12 கூறுகிறார்கள். இதன் அர்த்தம்..

இது கீதா பிரஸ் கோரக்பூர் தமிழாக்கம் ...
  
'ராமனுடைய மனைவிகள் உள்ளம் மகிழ்ந்து போகிறார்கள். (ஆனால் இங்கே ?) பாரதனுடைய மேலாண்மைக்கு குறைவு வந்துவிட்டதும், உன்னுடைய நாட்டு பெண்கள் அதிர்ப்தியோடு இருக்க போகிறார்கள்"  - 12

  
இது பிரபல இணையதள  தமிழாக்கம் ...

 ஹரிஷ்டாஃ கலு பவிஷ்யந்தி ராமஸ்ய பரமாஸ்ஸ்த்ரியஃ.
 அப்ரஹரிஷ்டா பவிஷ்யந்தி ஸ்நுஷாஸ்தே பரதக்ஷயே৷৷2.8.12৷৷


வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் :

ராமஸ்ய - ராமனின், பரமா: ஸ்த்ரீ - எல்லா  (ராமரின் அரண்மனை) பெண்களும், ஹரிஷ்டா -: மகிழ்ச்சி, விஷ்யந்தி கலு - உண்மையில், ரதக்ஷே - பாரதத்தின் வீழ்ச்சியுடன், தே - உன், ஸ்நுஷா: - மருமகள்கள், அப்ரஹரிஷ்டா -: மகிழ்ச்சியை இழந்தவர், பவிஷூந்தி - மாறும்.

  
All the women of Rama's (palace) will be delighted indeed. With the decline of Bharata, your daughters-in-law will be deprived of all happiness.


"ராமரின் (அரண்மனை) பெண்களும் உண்மையில் மகிழ்ச்சியடைவார்கள். பரதரின் வீழ்ச்சியினால் , உங்கள் மருமகள் அனைத்து சந்தோஷத்தையும் இழந்துவிடுவார்."  - 2-8-12


https://www.valmiki.iitk.ac.in/content?language=ta&field_kanda_tid=2&field_sarga_value=8&field_sloka_value=12

  
இதன் பின்னர் ...

 'இவ்வாறு மந்தரை பேச,பேச கைகேயி இதை கண்டுகொள்ளாமல், ராமரின் குணங்களை பாராட்டி பேச தொடங்கினாள் ' -13
   
'என் செல்வன் ராமன் தர்மம் அறிந்தவன்,ஆச்சரியர்களிடம் பணிவு உள்ளவன்,நந்தி உள்ளவன்,சத்யவான் பேசுபவன், நெருப்பை  போல  தூயவன், மேலும் அவனே  முத்த மகன் என்பதால்,அவன்தானே பட்டத்திற்கு உரியவன் ? ' - 14


எனவே, இப்படி ராமனை பிடிக்காத இந்த மந்தரை பேசுவதை வைத்து எப்படி ராமர் பல மனைவிகள் வைத்ததாக எடுத்துக்கொள்ள முடியும்?

மேலும், வேறு எந்த இடத்திலும் ராமர் பல பெண்களுடன் இருந்ததாக எங்குமே இல்லை.


 எனவே, ராமர் பல மனைவிகள் உன்டு என்பது ஒரு முழு பொய் ஆகும்.இந்த வசனத்தை அறிந்த எவனும் இப்படி கூற மாட்டான்.



No comments:

Post a Comment