Tuesday 18 July 2017

இயேசு கடவுளின் (கிருஷ்ணரின்) குமாரனா ?


இயேசு கடவுளின்  நல்ல குமரன்நாமும் கடவுளின் குமாரர்கள் தான். ஆனால் இயேசு ஒரு நல்ல குமாரனாக இருக்கிறார். நாம்  இயேசுவை  போல் நல்ல குமரன் ஆக முயற்சிக்கிறோம்.

ஆனால், கிறிஸ்தவர்கள்  கூறுவது  'இயேசு கடவுளின் ஒரே திருகுமாரன்' என்று சில சமயங்களில் சொல்கிறார்கள்.ஆனால், இயேசு பைபிளில் கூறுகிறார்.

' என்னை  வரவேற்பவர்கள்  எத்தனைபேரோ, அவர்கள்  எல்லோரும்  கடவுளின் திருகுமாரன் ஆவதற்கான அதிகாரத்தை நான் வழங்குகிறேன்' - யோவான் 11-12

என்று கூறுகிறார்அதோடு நீங்கள் நிறைய குழந்தைகள் பெற முடியும் பொது, கடவுளால் முடியாதா? கடவுள் என்ன மலடா?. நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்று புரிந்துகொள்ளாத பொழுதுதான் இந்த கஷ்டம் தோன்றுகிறது என்பதை காணலாம். இயேசு ஒரு நல்ல திருகுமாரன். ஆனால் நாமோ அவரை போல ஆகவேண்டும். அப்போதுதான் நாமும் கடவுளின் குழந்தைகளில் ஒருவராக கணக்கிடப்படுவோம்.

இயேசுவை போல் நல்லவராக முடியுமா? என்று சிலர் கேட்கலாம். இயேசு சொல்லியபடி அவரை போன்று நாமும் நல்லவராக ஆக வேண்டும் என்பதோடு குத்தம் இல்லாதவராகவும் ஆகவேண்டும். இதையே இயேசு பைபிளில் கூறுகிறார்

'மேலுலகில் கடவுள் குத்தம் இல்லாதவராக இருப்பதை போன்று நீ குத்தம் இல்லாதவனாக இரு" - மத்தேயு 5.48

என்று கூறுகிறார். அதாவது, ஒருவன் கடவுளின் தொண்டன் என்று உண்மை நிலையை அறிந்து கொள்வது தான், உண்மையில் கடவுளின் குழந்தை என்பதன் பொருள் ஆகும்.

இதன் பிறகு, சில கிறிஸ்தவர்கள் கூறுவது ஏசுபிரான் ஒரே ஒரு கடவுளால் உண்டாக்கப்பட்ட குழந்தை என்று விவாதம் செய்வார்கள். ஆனால் இது உண்மை இல்லை. அதாவது, ஒருவன் பழைய ஏற்ப்பாட்டை நன்கு படித்தால் புரியும். அதாவது இஸ்ரேல் நாட்டின் குழந்தைகள் அனைவருமே உண்டாக்கப்பட்ட குழந்தைகள் என்று அழைக்கப்பட்டனர் என்பது தெரியவரும்.

இந்த 'உண்டாக்கப்பட்ட ஒரே" என்பது கிறிஸ்தவ சர்ச் என்பவரின் கொள்கைதான். இது உண்மையான கிறிஸ்தவ மதத்திற்கு எந்த விதத்திலும் பொருந்தாது. அதாவது, இவர் காலத்திற்கு பிறகு அனைத்து கிறிஸ்தவ மத சர்ச்சுகளில் சபை தரம் கெட்ட மத குருமார்கள், பைபிளில் வார்த்தைகள் இடை சொருகல்கள், குரு பரம்பரை இல்லாமை ஆகியவற்றின் காரணமாக பைபிளின் உண்மை தன்மை தெரியாமல் போய்விட்டது.

இவ்வாறு பைபிளின் உண்மை தன்மையை அறிந்து கொள்வது தற்காலத்தில் ரெம்ப கடினமே ஆகும்.

எனவே, உண்மையான பைபிள் படி இயேசு ஒரு நல்ல கடவுளின் குழந்தை, நாமும் அவரை போல நல்ல குழந்தையாக ஆக முயற்ச்சிக்க வேண்டும் என்பதே இயேசுவின் விருப்பம் ஆகும்.


 இயேசு பொதுவாக தன் தந்தையை 'பிதா' என்றுதான் பைபிளில் கூறுகிறார். ஆனால், பிதாவின் பெயர் 'கிறிஸ்தோஸ்' (Christos) என்றும் கூறுகிறார். இயேசு கூறுகிறார் 'Hallowed by name' என்றும் சொல்கிறார். அதாவது பிதாவிற்கு பெயர் உண்டு என்றும், அந்த பெயரை அவர் எல்லோருக்கும் கூறவில்லை, காரணம் மக்கள் அதை சரியாக புரிந்து கொள்ள முடியாதது தான்.

'உங்களுக்கு சொல்லஏராளமான விஷயங்கள் என்னிடம் உள்ளன, ஆனால் உங்கள் காதுகள் அவற்றை ஏற்க்கமாட்டா" - யோவான் -16-12

"இவ்வுலகவிசயங்களை குறித்து நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை எனில், ஆன்மீக விசயங்களை குறித்து நான் சொன்னால் நீங்கள் எப்படி நம்ப போகிறீர்கள்" - யோவான் -3-12

"கடவுளின் ராஜ்யத்தின் ரகசியங்கள் உங்களுக்கு நான் கூறினேன், ஆனால் வெளியில் உள்ள மக்களுக்கு எல்லாம் சிறு சிறுகதைகள் (உவமைகளாக) மட்டுமே கூறினேன்" - மார்க்கு 4-11


சனாதன தர்மத்தின்....

'எல்லா பொருள்களின் மூலம் நானே, எல்லாம் என்னிடமிருந்தே வந்தது ' – பகவான் கிருஷ்ணர்  , பகவத்கீதா 7.6,

குந்தியின் மைந்தனே, எல்லா உயிரினங்களும் இவ்வுலகில் பிறப்பினால் சாத்தியமாக்கப்படுகின்றன. மேலும், நானே விதை அளிக்கும் தந்தை என்பதும் புரிந்து கொள்ளப்படவேண்டும். - பகவத்கீதா 14-4

இந்த அகிலத்தின் தந்தையும் தாயும் காப்பவனும் பாட்டனாரும் நானே. பகவத்கீதா 9-17

முழுமுதற் கடவுள் கிருஷ்ணரே எல்லா உயிர்வாழிகளுக்கும் உண்மையான தந்தை என்பது இப்பதத்தில் மிகத்தெளிவாக விளக்கப்பட்டுள்ளது

‘எல்லா விதமான மத நெறிகளையும் துறந்து, என்னிடம் (கிருஷ்ணரிடம்) மட்டுமே சரணடையவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன், பயப்படாதே’. - பகவான்கிருஷ்ணர் -பகவத்கீதா 18-66.


பாவவிளைவுகளிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்வதற்கு கடினமான முயற்சிகள் அவசியமில்லை. எல்லா உயிர்வாழிகளின் உன்னத இரட்சகர் கிருஷ்ணரே என்பதை ஒருவன் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ளவேண்டும். அன்புடனும் நம்பிக்கையுடனும் அவரிடம் சரணடையவேண்டும்.




No comments:

Post a Comment