Friday 12 January 2018

இராவணனைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள் தமிழர்களே!!





1. இராவணன் உத்தரப் பிரதேசத்தில் பிஷ்ரக் எனும் ஊரில் பிறந்தவன்.

2. விஸ்ரவஸ் என்பவனுக்கு மகனாக பிறந்தவன்.

3. இராவணனை வலித்த அரக்கன், இராக்கதன் என்று தமிழ்ச் சங்க இலக்கியமாகிய புறநானூறு(378) கூறுகிறது.[ஆரியர்களோ பார்ப்பனர்களோ அல்ல.]

4. இலங்கைக்கு சென்ற இராவணன் குபேரனிடமிருந்து அதை பறித்துக் கொண்டு ஆட்சி செய்தான். இலங்கை இராவணனின் சொந்த ஊரல்ல.

5. தமிழ்ச் சங்கக் கடவுளாகிய திருமால் இராமனாக அவதரித்து இராவணனைக் கொன்றதாக
தமிழ் நம்மாழ்வார் திருவாய்மொழியில் கூறியுள்ளார்

 6. ராமாயணத்தைப் பற்றி தமிழ்ச் சங்க அகநானூறு (70), புறநானூறு பாடியுள்ளது.

ராமாயணத்தை கட்டுக்கதை என்போர் தமிழ்ச் சங்க நூல்களையும் கட்டுக்கதை என்று சொல்ல வேண்டும்.

7. தமிழ் முனிவர் அகத்தியரிடம் சமஸ்கிருத வேத பண்டிதனாகிய இராவணன் போட்டியிட்டுத் தோற்றுள்ளான்.

8. இராவணனுக்கும் தமிழுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவன் குடும்பப் பெயர்களான விபீஷண, கும்ப கர்ண, இந்த்ரஜித், மேகநாத, மண்டோதரி, பூதனை எனும் எந்தப் பெயரும் தமிழ் கிடையாது.

9. சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை தமிழ்க் கடவுளான திருமாலின் அவதாரம் இராமனின் புகழைக் கேளாத காதுகளை ஏசுகிறது.

10. இராமனுக்கும், இராவணனுக்கும் சம காலத்தில் வாழ்ந்த வால்மீகி பதிவு செய்த இராமாயணம் மட்டுமே அதிகாரபூர்வமானது.
மற்ற பிற இராமாயணங்கள் எல்லாம் பிற்காலத்தில் வேறு பலரின் கற்பனைகள் புகுத்தப்பட்டுள்ளது.
அவை நிஜமல்ல.

11. இராவணன் பல பெண்களை கற்பழித்ததால் பிரம்மன் அவனுக்கு இனி எந்தப் பெண்ணையும் விருப்பமின்றி தொட்டால் தலை வெடித்து சாவாய் என சாபமிட்டிருந்தார்.

அதன் பொருட்டே அவன் பின்னாளில் சீதையை தொட அஞ்சினான். உடன் வர கொலை மிரட்டலும் செய்தான்.

12. இராவணனை கொல்லும் முன்னர் இராமன் தமிழ் முனிவர் அகத்தியரிடம் ஆசி பெற்றதாக தமிழ்சேர மன்னர் குல சேகர ஆழ்வார் பெருமாள் திருமொழியில் உரைத்துள்ளார்.

13. பிறன் மனைவியை நோக்காமையே பெரும் ஆண்மை என திருவள்ளுவர் கூறியுள்ளார். அதன்படி இராவணன் ஆண்மையற்றவன்.

இராவணனை புகழ்பவர்கள் திருவள்ளுவர்க்கு எதிரானவர்கள் என்பதை அறிய வேண்டும்.

14. இராவணன் தமிழ் பேசியதாக வால்மீகி இராமாயணத்திலோ தமிழ்க் கம்பராமாயணத்திலோ எங்குமே குறிப்பிடவில்லை.

15. சூர்ப்பநகை சீதையைகக் கொல்ல முயன்றதால் மட்டுமே இலக்க்ஷ்மணன் அவளது மூக்கைத் துண்டித்தான்

16. தமிழ்க் கம்பராமாயணத்தில் இராவணன் ஆய கலைகள் 64ம் அறிந்தவனாயினும் சிறந்த சிவபக்தனாயினும்,

இராவணன் ஈவு இரக்கமற்ற அரக்கன் என்றே கம்பர் கூறுகிறார்

17. வாலி சுக்ரீவனின் மனைவியை அபகரித்தான். தன் எதிரில் வருபவனின் பலம் எல்லாம் இல்லாமல் போக வேண்டும் என்ற வரம் பெற்றவன். அதனால் தான் இராமன் மறைந்திருந்து தண்டித்துக் கொன்றார்.

இதை வாலியே ஒத்துக் கொண்டு செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு விட்டான்.

சீதையை இராவணன் கண்ணியமாக நடத்தினான்  ஆனால் ராமன் அவ்வாறா
எனப்பலர் கொக்கரிக்கின்றனர்

👑 பெண்களின் வயித்தெரிச்சலை கொட்டி கொள்வதில் இராவணனுக்கு இணை எவருமே இல்லை

👑 ஆயிரக்கணக்கான மனைவிகள் இருந்தாலும் தனது தாயின் சகோதரியான மாயாவிலிருந்து

👑 மருமகளுக்கு இணையான ரம்பை வரை எவரையும் இராவணன் விட்டுவைக்கவில்லை

👑 (இராவணனின் சகோதரனான குபேரனின் மகனான நளகூவரனின் மனைவியே ரம்பை ஆவாள்)

👑 இவ்வாறு பெண்பித்தால் இராவணன் பெற்ற சாபங்களில் நாம் காணவிருப்பது பிரம்மதேவரின் சாபம்

👑 அனுமந்தனின் தாயான அஞ்சனை முற்பிறப்பில் புஞ்சஹஸ்தலை என்ற பெயருடைய அப்சரஸாக இருந்தார்

👑 அவர் பிரம்மதேவரை தரிசிக்க வான்வழியாய் செல்வதை கண்ட இராவணன் அவரை பலவந்தமாக பிடித்து அவரின் ஆடைகளை பலவந்தமாக உருவுகிறான் இதனால் அப்பெண் பிரம்மதேவரை சரணடைய அவர் நடந்ததை அறிந்து இராவணன் இவ்வாறு விருப்பமில்லாத பெண்களை தொட்டால் அவனின் தலை சுக்குநூறாக உடையும் என சபிக்கிறார்

(இதை இராவணனே யுத்தகாண்டத்தில் அமைச்சனான மஹாபார்ஸ்வன் இடத்தில் உரைக்கிறான்)


No comments:

Post a Comment