Friday 12 January 2018

ஐயப்பனின் உண்மை கதை !



நிறைய மக்கள் (ஹிந்து மற்றும் பலரும்) சொல்வது, ஐயப்பன் என்பவர் பகவான் விஷ்ணு, மோகினி ரூபம் எடுத்து வந்த போது சிவன் அவர் மேல் காமம் வந்து அதனால் உண்டானவர் தான் - ஐயப்பன் என்கிறார்கள்.

ஆனால், இது உண்மை இல்லை. இது ஒரு கீழ் நிலை தமோகுண வழிபாடாகும்.

 சனாதன தர்ம சாஸ்திரமாகிய வேதம், புராணங்கள் மற்றும் வேறு எதிலுமே ஐயப்பன், சுடலைமாடன், கருப்பசாமி..., etc  இப்படி உள்ள சிறு தேவர்கள் பத்திய குறிப்பு அல்லது அவர்களை பத்திய வரலாறு, இப்படி எதுவும் சாஸ்திரங்களில் இல்லை என்பதே உண்மை.

உண்மையிலேயே, ஐயப்பன் என்பவர் ஒரு சாதாரண மனிதராக, ஒரு அரசனாக இருந்திருக்கலாம், ஆனால் மக்கள் பின்னர் அவரை வழிபட்டு, பின் சில கதைகளை அவர்களே சேர்த்திருக்க வேண்டும்.

பொதுவாக, ஐயப்பன் கதை உள்ளதாக சொல்லப்படும், பிரம்மாண்ட புராணம், ஸ்ரீமத் பாகவத புராணம்   எட்டாம் காண்டம், 12 வது அத்தியாயத்தில் சொல்லப்படும் உணமையான கதை பின்வருமாறு:

 விஷ்ணு ஒரு தடவை மோகினி ரூபம் எடுத்து வந்தார், ஆனால் அந்த மோகினி ரூபத்தை பார்க்க சிவன் ஆசை பட்டார், அபோது விஷ்ணு, சிவனை கூடிக்கொண்டு ஒரு வனத்தில் வருகிறார், பின் சிவனை நோக்கி, கொஞ்சம் நேரம் இருங்கள் என்று கூறிவிட்டு அவர் போகிறார். அதன் பின்பு அந்த வனத்தில் ஒரு கொலுசு சதம் கேட்க, ஒரு அழகான பெண் அங்கு செல்கிறாள், அதை பார்த்து சிவன் அந்த பெண்ணை பின் தொடர்கிறார். அதன் பின்தான் தான் எதற்கு வந்தேன் என்பதை அறிந்து. பின் அந்த பெண் விஷ்ணு தான் என்பதை அறிந்து, பகவானிடம் மன்னிப்பு கேட்டு, அதன் பின் சிவன்  பகவானை புகழ்த்து சில பாடல்களை படுகிறார்

பின் சிவனும், விஷ்ணுயும் போய் விடுகிறார்கள். இவ்வளவு தான் நடந்தது. அதுவும் சிவன் அந்த பெண் விஷ்ணு தான் என்று தெரியாமல் பின்தொடர்ந்தார். அதாவது பகவானது எல்லா அம்சங்களுமே ஒருவனை மயக்கக்கூடியது, அப்படியிருக்க மிக உயர்ந்த நிலையிலுள்ள சிவபெருமான் இதுவே முதல் தடவையாக,கடைசியுமாக பகவானின் மோகி ரூபத்தில் மட்டுமே சிறிது மயங்கினார். அவ்வளவு சக்திவாய்ந்தது பகவானின்  மாயை எனும் சக்தி.


எனவே, ஐயப்பன் கதை ஒரு முன்னோர் வழிபாடு ஆகும். இதை எந்த ஒரு உண்மையான அன்மீகவாதியும், சாஸ்திரங்களை ஒழுங்காக அறிந்தவனும் அறிவான்.

No comments:

Post a Comment