Thursday 28 September 2017


வேத சாஸ்திர - பவிஷ்ய புராணத்தில் முஹமது நபி பற்றி சொல்கிறதா ?


சில முஸ்லிம்கள் வேத இலக்கியமான பவிஷ்ய புராணத்தில் முஹமது நபி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

பொதுவாக புராணங்கள் 18 உள்ளன. இதில் பவிஷ்ய புராணம் நிறைய இடைச்சொருகல்கள் முந்தய முஸ்லீம் மன்னர்கள் காலத்திலேயும், சமண-புத்தமத காலகட்டத்திலேயும் கருத்துக்களை, பிராமணர்களை கொண்டே திருத்தியதாக வரலாறு  கூறுகிறது. இப்படி வருபவைகளே சில ஆபாச கதைகளும்,கருத்துக்களும். .காகோவிலில் உள்ள ஆபாச சிற்பங்கள்.

எனவே, இவைகளில் உள்ள கருத்துக்களை அப்படியே ஏற்க முடியாது. அதாவது,இதில் உள்ள கருத்துக்கள் பிற புராணங்களில் உள்ள கருத்துக்களும் ஓத்து வந்தால் மட்டுமே ஏற்கலாம். ஆனால், இந்த கருத்துக்கள் மாறுபாடுகள் இருந்தால் அதை ஏற்க முடியாதது ஆகும். இப்படிப்பட்ட பல்வேறு இடைச்சொருகல்கள் உள்ள புராணமே தற்போதைய பவிஷ்ய புராணம். ஏன் இந்த புராணத்தில் விட்ட்டோரிய மஹாராணி பற்றி கூட குறிப்புகள் உள்ளதே !

சரி. இந்த புராணத்தில் முஸ்லிம்கள் குறிப்புடுவதாக உள்ள நபி யார என்பதை பார்க்கலாம்..

பவிஷ்யபுராணம். ப்ரதி சாரக் பாகம் 3, காண்டம் 3, அத்யாயம் 3. சுலோகம் 5-7
"ஒரு அந்நிய நாட்டில் ஒரு மிலேச்ச புனிதமான ஆசாரியர் (ஒரு ஆன்மிக சீர்த்திருத்தவாதி ) தனது சீடர்களுடன் தோன்றுவார். அவர் பெயர் மஹாமத் .அவர் பாலைவனத்தை சார்ந்தவர்."

பவிஷ்யபுராணம் 3. 3. 13
" அவர்கள் சுன்னத்து செய்வார்கள், தலையில் குடுமி இருக்காது , தாடி வைத்திருப்பார்கள் , சப்தமாக வழிபாட்டிற்கு அழைப்பார்கள் , முஸ்லீம் என்று! அழைக்கப்படுவார்"

ஏதஸ் மின்னந் தாரா மிலேச்ச ஆச்சார்யண ஸமின் வித மஹாமத்
இதிக்கியாத சிஷ்ய சாகா ஸமன்வித நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல நிவாஸினம்
பவிஷ்யபுராணம். ப்ரதி சாரக் பாகம்3 காண்டம் 3 அத்யாயம் 3. சுலோகம் 5

"சாலி வாகனர் குலத்தில் பத்து அரசர்கள் அரசாள்வார்கள் . பத்தாவது அரசனாகிய போஜ ராஜன் வேத தர்மங்கள் சில இடங்களில் மறுக்கப் பட்டத்தை அறிந்து தன் தேசத்தின் எல்லாத் திசைகளிலும் சென்று மாருபட்டவர்களை அடக்குவார்".

இந்த ஸ்லோகத்தில் மஹாமத் என்ற வார்த்தையை முஸ்லிம்கள் முஹம்மதாக மாற்றி அர்த்தம்  கற்பிக்கின்றனர்.

குர்ஆன், ஹதீஸ்களில் எந்த ஒரு இடத்திலும் முஹம்மத்தை மஹாமத் என குறிப்பிடவில்லை.அப்படி இருக்க முஸ்லிம்கள்  உயர்வாக நினைப்பது குர்ஆன்ஹதிஸ்ஸயா? அல்லது பவிஷ்ய புராணத்தையா?

மஹாமத் என்பதில் மத் என்ற சொல் அரசனை குறிப்பதாகும். ஆக இது போஜராஜனை தான் குறிக்கிறது என்பது தெளிவாகிறது.

உச்சவ் பூபதி பிரமனே மஹாமத்
விர்ஷாத் த்வா தேவ மஹாராஜா முஹம்மதா சூர மகத்
பவிஷ்யபுராணம் 3. 3. 3. 6

திரிபுர அசுரன் என்பவன் மறுபிறவியல் முஹம்மதாசூரனாக அவதரிக்கிறான். அவன் பாலைவன தேசத்தில் இருந்து பாரதத்திற்கு வந்து போஜராஜனை சந்திக்கிறான். அவர்கள் இருவரிடையே ஏற்படும் விவாதத்தின் முடிவில் பழமையான சிவாலயமான மெக்காவிற்கு செல்கின்றனர்.

பின்னர் போஜராஜன் மருஸ்தல் (பாலைவனம்)இல் உள்ள மகாதேவரின் உருவத்துக்கு பூஜை செய்வார். அவர் மகாதேவருக்கு கங்கை நீராலும் பஞ்ச கவ்வியங்களாலும் அபிஷேகம் பண்ணி பூஜை செய்து மகாதேவரை திருப்திப் படுத்துவார்.போஜராஜன் மகாதேவருக்கு பிரார்த்தனை செய்வார்.

கிரிஜனாதரே மருஸ்தல் இல் வசிப்பவரே உங்களை நமஸ்கரிக்கிறேன். நீங்களே மாயத்தில் வல்லவர்கலாகிய திரிபுராசுரர்களை அளித்தீர்கள். மேலாக்கர்களும் உங்களை வணங்குகிறார்கள். நீங்களே தூய சச்சிதானந்த சொரூபம். நான் உங்களை சரணடைகிறேன்.”

சிஷ்ய சாகா ஸமன்வித
நிருஷ் சேவ ஹமாதே மருஸ் தல
நிவாஸினம்
 சூதமுனிவர் மேலும் கூறுகிறார்.
அரசனின் பிரார்த்தனையைக் கேட்ட மகாதேவர் கூறுகிறார்.:
மன்னனே நீ மறுபடி மகாகாலேஷ்வர் (உஜ்ஜைனி) திரும்புவாயாக. நீ நிற்கும் இந்த இடமானது பாஹிக் (பால்டிக்) என்ற பெயரால் அறியப்படும். இது மேலாக்கர்களால் (மெக்கா மக்கள்) அசுத்தம் அடைந்துள்ளது.இந்தப் பாவ பூமியில் தருமம் ஒருபோதும் நிலைக்காது.

இங்கு மாயைகளில் வல்லவனாகிய என்னால் முன்னர் எரித்து சாம்பலாக்கப் பட்ட திரிபுரா அசுரர்களில் ஒருவன் மறுஜன்மம் எடுத்துள்ளான். அவன் மகாபலியின் கட்டளைப் படி இங்கு தோன்றி உள்ளான். அவனுக்கு குளம் கிடையாது. ஆனால் என்னைப் பூஜித்து வரம் பெற்றுள்ளான். அவன் பெயர் முஹம்மதாசூரன். அவன் செயல்கள் எல்லாம் பிசாசகளின் செயல்களைப் போல் இருக்கும். அதனால் போஜராஜனே இந்த பிசாச பூமியில் இருந்து வெளியேறிச் செல்வாயாக. என் கருணை உனக்கு என்றும் உண்டு.

இதைக் கேட்ட அரசன் மறுபடி உஜ்ஜைனி திரும்பி வருவார். அவர்கள் யாத்திரையில் மெதினாவைக் கடப்பார்கள். அங்கும் பூதம் ஒன்று இருக்கும். முகம்மது அவருடன் சிந்து நதியின் கரை வரை வருவான் அவன் மாயத் தோற்றங்கள் தோற்றுவிப்பதில் வல்லவன். அவன் அரசனைப் பார்த்து அரசனே உனது கடவுள் இப்போது என் எச்சிலை ஏற்றுக் கொள்வதைப் பார் என்று கூறி அவ்வாறானதொரு தோற்றத்தைக் காட்டுவான். இதைக் கண்டு அரசன் அதிர்ச்சி அடைவான். காளிதாசன் சண்டாளனே உன் மாயத்தோற்றத்தால் நீ மகாதேவரை அவமதிக்கிறாய் உன்னை நான் கொள்வேன் என்று ஆத்திரம் கொள்வான்.

முஹம்மதாசூரன் மேலும் கூறுவான்.
தஷ்மன் முஸல்வந்தோ ஹி ஜதியோ தர்மோ துஷிகா இதி பிசாச தர்மோ மியா கிருத்.
பவிஷ்யபுராணம் 3. 3. 3. 9

"!போஜராஜனே! உன் மார்கமானது உலகில் தலை சிறந்ததாக விளங்குகிறது. அது உலக மக்களின் நன்மைக்கு நித்தியமாய் இருப்பது.
நானும் ஒரு பிசாசு மதத்தை ஸ்தாபிப்பேன்.அந்த பிசாசு மதத்தை பின்பற்றுவோர் பின்வருமாறு இருப்பர்"

முஸ்லிம்கள் கூறுவது போல் மொஹமத் என்பவரே நபி என்று எடுத்துக்கொண்டால், இந்த வசனத்தில் அவரே கூறுகிறார் நானும் ஒரு பிசாசு மதத்தை உருவாக்குவேன் என்கிறார்.

லிங்கச்சேதி சிகா ஹுன
சுமக்சுறு தாரி ஸாதூஷக
உச்சாலாபி ஸாவ பஹீ
பவிஷ்யதி ஜனோமம முஸலை நைஸ் மஸ்கார
பவிஷ்யபுராணம் 3. 3. 13

அந்த பிசாசு மதத்தை பின்பற்றுவோர் பசுவை அறுத்துண்ணுவார்கள். பன்றியை தவிர்ந்த மற்ற மாமிசத்தை உண்பர்.லிங்கசேதனம் (சுன்னத்) செய்பவராக இருப்பர். குடுமி வைத்திராது தாடி வைத்திருப்பர். சத்தமானமுறையில் பிசாசு மத வழிபாட்டில் ஈடுபடுவர், அவர்கள் முஸல்மான் என அறியப்படுவர்.

இதில் அரசனைச் சந்திக்கும் போது அவன் அந்த மார்க்கத்தை ஏற்கெனவே ஸ்தாபித்து விட்டானா அல்லது இனிமேலா என்ற தெளிவு இல்லை எனினும் அவனுடன் சீடரும் வந்தனர் என்று கூறப் படுவதால் அரசனைச் சந்திக்கும் பொது முஹம்மதாசூரன் புதிய மதத்தை ஸ்தாபித்திருப்பான் என்றே கொள்ள வேண்டி உள்ளது.

இதைப் பற்றி சிந்திக்கும் போஜராஜன் பிசாசு மதத்தோரிடம் இருந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டி சமஸ்க்ருத மொழியையும் வேதங்களையும் முதல் மூன்று வர்ணங்களான பிராமண க்ஷத்திரிய வைசிய வர்ணத்தாருக்கு மட்டும் அளிப்பான். நான்காவது வர்ணத்தாருக்கு வேதம் ஓதும் உரிமை இல்லாமல் போகும். வேத உபயோகம் தவிர்ந்த ஏனைய உரையாடல்களுக்கு சாதாரண மொழி ஒன்றை உருவாக்குவான். முஸ்லிம்கள் சிந்து நதிக்கு மறுகரையில் உருவாவார்கள்.”

இவைதான் பவிஷ்யபுராணத்தின் உண்மை வடிவம்., சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி என்பது போல நாங்களே பொருட்படுத்தாத புராணத்தில் நபியை பற்றி கூறப்படுகிறது  என எங்களை அதை படிக்க தூண்டி இப்படி நபியைும் இஸ்லாத்தையும் தாமே அவதூறாக்கிக்கொண்டதுதான் மிச்சம்.

பவிஷ்யபுராணம் – முகமதியர்கள் மற்றும் ஆங்கிலேயர் காலங்களில் உருவானதும், தொடரப்பட்ட இடைச்செருகல்களும்!....


https://indianhistoriography.wordpress.com/2015/06/23/bhavishya-purana-interpolated-by-mohammedans-british-amounts-to-historical-fraud/

No comments:

Post a Comment